வேளாங்கண்ணி மாதா ஆலயத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பத்து பேர் கைது
செப்.08,2011. கடந்த ஞாயிறன்று கேரளாவில் கொல்லத்திற்கருகே வேளாங்கண்ணி மாதா ஆலயம் ஒன்றில்
புகுந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பத்து பேரை கொல்லம் காவல்துறையினர் இப்புதனன்று
கைது செய்துள்ளனர். தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது திருப்தியை
அளிக்கிறது என்றும், தாக்கப்பட்ட கோவிலைச் சுற்றி காவல் பலப்படுத்தப்பட்டுள்ளதென்றும்
கொல்லம் மறைமாவட்ட ஆயர் Stanly Roman கூறினார். இந்தத் தாக்குதல்களுக்கு இந்து அடிப்படைவாதக்
குழுக்களே காரணம் என்று ஊடகங்கள் கூறிவந்தன. இத்தாக்குதல்கள் இரு குழுக்களிடையே உருவான
பகையின் ஒரு வெளிப்பாடே என்றும், மத அடிப்படைவாதம் காரணம் அல்லவென்றும் காவல்துறை அதிகாரி
T.J.ஜோஸ் கூறினார்.