இங்கிலாந்து ஆயர்: கருக்கலைப்பு பற்றியத் தெளிவான சிந்தனைகள் இல்லையெனில்
இப்பிரச்சனை உலகை இன்னும் அதிக ஆழமாகப் பாதிக்கும்
செப்.07,2011. கருக்கலைப்பு பற்றியத் தெளிவான சிந்தனைகள் இல்லையெனில் இப்பிரச்சனை உலகை
இன்னும் அதிக ஆழமாகப் பாதிக்கும் என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார். கருக்கலைப்பு
குறித்த சட்டங்களில் மாற்றங்கள் செய்யும் முயற்சியில் பிரித்தானியப் பாரளுமன்றம் இப்புதனன்று
ஈடுபட்டிருக்கும் வேளையில், இது குறித்து பேசிய பேராயர் பீட்டர் ஸ்மித் இவ்வாறு கூறினார். கருகலைப்பு
செய்துகொள்ள வரும் பெண்களுக்கு அதைச் செய்யும் மருத்துவர்களே ஆலோசனை வழங்கும் முறையே
பிரிட்டனில் தற்போது நடைமுறைச் சட்டமாய் உள்ளது. இதை மாற்றி, ஆலோசனைகள் வழங்குவோர் தனிப்பட்டதொரு
குழுவினராய் இருந்து செயல்பட வேண்டும் என்ற மாற்றத்தைக் கொணரும் முயற்சிகள் தற்போது பிரித்தானிய
பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலோசனைகள் வழங்குவது என்பதே ஒரு சுதந்திரமான
சூழலில் நடைபெறவேண்டும். எனவே, கருக்கலைப்பில் ஈடுபாடாதவர்கள் இந்த ஆலோசனைகளை வழங்குவதே
சரியான முறை என்று ஆயர் ஸ்மித் வலியுறுத்திக் கூறினார்.