2011-09-06 14:11:57

தகவல் தொடர்புத்துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் கருத்தரங்கு


செப் 06, 2011. தகவல் தொடர்புத்துறையின் புதியத் தொழில்நுட்பங்கள் குறித்த இரு நாள் கருத்தரங்கை டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது இந்திய ஆயர் பேரவையின் சமூகத்தொடர்பு ஆணைக்குழு.
கொல்கத்தாவிலுள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் ஒத்துழைப்புடன் டிசம்பர் முதல் தேதி துவங்கும் இந்தக் கருத்தரங்கில் 'புதியத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களும் சவால்களும்' என்பது குறித்து விவாதிக்கப்படும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் கல்லூரியும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த அதிகபட்சம் 4 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் இக்கருத்தரங்கிற்கு அனுப்பவேண்டும் என இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தகவல் தொடர்பு ஆய்வு, கருத்தரங்குகள் ஏற்பாடுச் செய்தல், இத்துறையில் மாணவர்களுக்கென கல்வித் திட்டங்களை வகுத்தல் போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது இந்திய ஆயர் பேரவையின் தகவல் தொடர்பு ஆணைக்குழு.








All the contents on this site are copyrighted ©.