செப்.02,2011. ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் "ad Limina
Apostolorum" என்ற சந்திப்பையொட்டி வட இந்தியாவின் எட்டு ஆயர்கள் இவ்வெள்ளிக்கிழமை திருத்தந்தையைச்
சந்தித்தனர். உரோம் நகருக்குத் தென்கிழக்கே காஸ்தெல் கந்தோல்ஃபோவில் அமைந்துள்ள பாப்பிறைகளின்
கோடைவிடுமுறை இல்லத்தில், நாசிக் ஆயர் லூர்டெஸ் டானியேல், புனே ஆயர் தாமஸ் தாப்ரே, புனே
முன்னாள் ஆயர் வலேரியன் டி சூசா, வசை ஆயர்-பேராயர் பெலிக்ஸ் அந்தோணி மச்சாடோ, ஔரங்கபாத்
ஆயர் எட்வின் கொலாஸ்கோ, சிந்துதுர்க் ஆயர் அந்தோணி ஆல்வின் ஃபெர்ணான்டெஸ் பரெட்டோ, அகமதபாத்
ஆயர் தாமஸ் இக்னேஷியஸ் மக்வான், பரோடா ஆயர் காட்ஃப்ரே தெ ரொசாரியோ ஆகியோரைச் சந்தித்தார்
பாப்பிறை. இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை இந்தியாவின் 164 மறைமாவட்டங்களின்
ஆயர்களை மூன்று குழுவினராகச் சந்தித்தத் திருத்தந்தை, இருமாத இடைவெளிக்குப் பின்னர்,
மீண்டும் இந்த செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 19ம் தேதி வரை இந்திய ஆயர்களின் கடைசிக்
குழுவினரைச் சந்தித்து வருகிறார்.