இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்கும் புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன
செப்.02,2011. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த இராஜ பக்சா நாட்டின் அவசரகால நிலையை நீக்கிவிட்டதாக
சென்ற வாரம் அறிவித்திருந்ததை இலங்கைக் கிறிஸ்தவர்கள் தயக்கத்துடனும், சந்தேகத்துடனும்
ஏற்றிருந்தனர். அவர்களது சந்தேகங்கள் சரியே எனும் வகையில், இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்கும்
புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவசரகால நிலை அமலில் இருந்தபோது காணப்பட்ட
பல கட்டுப்பாடுகள் இச்சட்டங்களால் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் நிலை உருவாகியுள்ளதென்று
ஆசியச் செய்தி நிறுவனம் கூறுகிறது. இப்புதிய சட்டங்களின் அடிப்படையில், யாருடைய இல்லமும்
எந்த நேரத்திலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும், மற்றும் யாரையும் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யும் உரிமையும் அரசுக்கு உண்டு என்பன போன்ற வழிகள் இச்சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இம்மாதம்
ஜெனீவாவில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர்மட்டக் குழு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள்
குறித்து விவாதிக்கவுள்ள இந்த வேளையில், அந்நாடு அவசரகால நிலை பிரகடனத்தை நீக்கியுள்ளதாகக்
கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.