2011-08-27 16:10:37

இலங்கையில் நாள் ஒன்றுக்கு 700 கருக்கலைப்புக்கள்


ஆக.27,2011. இலங்கையில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 பாதுகாப்பற்ற கருக்கலைப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரகசியமாக சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருக்கலைப்புச் சம்பவங்களினால், பலர் கருப்பைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
கொழும்பில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும் நலவாழ்வுப் பிரச்சனையாக இந்த நிலைமை மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.