2011-08-26 14:41:20

அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அரசுத்தலைவர் முடிவு


ஆக.26,2011. நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளை ஜனநாயக முறைப்படி சாதாரண சட்டத்தின் கீழேயே முன்னெடுக்க முடியுமென்பதால் அவசரகால சட்டத்தை நீக்கிவிடுவதற்கான யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதாக இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
நாட்டின் நிர்வாகத்துக்கு அவசரகாலச் சட்டத்தின் தேவை இப்போது இல்லையென்று தான் திருப்தி அடைந்துள்ளதாலேயே அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமலிருக்க தீர்மானித்ததாக மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான அவசரகால சட்டம் ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தில் நீடிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, அவசரகாலச் சட்டத்தை நீடிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அரசியல் ரீதீயான பல பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.