மறைக்கல்விக்கும் திருவழிபாட்டிற்கும் இடையே இன்னும் அதிக பிணைப்பு உருவாக வேண்டும்
- திருத்தந்தை
ஆக.25,2011. மறைக்கல்விக்கும் திருவழிபாட்டிற்கும் இடையே இன்னும் அதிக பிணைப்பு உருவாக
வேண்டும் என்று திருத்தந்தை கூறினார். இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தாலிய
ஆயர் பேரவையினரால் நடத்தப்படும் ‘இத்தாலியத் திருவழிபாட்டு வாரம்’ என்ற கூட்டத்திற்கு
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வழியாக தன் செய்தியை அனுப்பியத் திருத்தந்தை
இவ்வாறான அழைப்பை முன் வைத்தார். நாம் கொண்டாடும் திருவழிபாடு நமது மறைக்கல்வி மற்றும்
ஒவ்வொரு நாள் வாழ்வின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை,
நம் ஆன்ம வாழ்வு நல்வழியில் முதிர்ச்சி அடைவதற்கு திருவழிபாடு ஒவ்வொரு நாளும் உதவியாக
இருக்க வேண்டும் என்று தன் செய்தியில் கூறினார்.