ஆக.24,2011. அர்ஜென்டினா நாட்டில் எடுக்கப்பட்டு வரும் பிறரன்பு நடவடிக்கைகளுக்குத் தாராளமாகப்
பதிலளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தென் அமெரிக்க நாடான
அர்ஜென்டினாவில் வருகிற செப்டம்பர் 11ம் தேதி அனைத்துப் பங்குகளிலும் நடத்தப்படவிருக்கும்,
“Más por Menos” அதாவது “இல்லாதோர்க்கு அதிக உதவி” என்ற பொருள்படும் நடவடிக்கைக்கு ஆதரவு
வழங்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை. அர்ஜென்டினா ஆயர் பேரவையின் ஏழைகளுக்கு உதவும்
பணிக்குழுவின் தலைவரான ஆயர் Adolfo Urionaவுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில்,
கிறிஸ்தவப் பிறரன்பின் முக்கியவத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். அர்ஜென்டினாவில் அடுத்த
மாதத்தில் எடுக்கப்படும் நன்கொடைகள் அந்நாட்டின் 25 மறைமாவட்டங்களுக்கும் பிரித்துக்
கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.