இலங்கையில் காரித்தாஸ் உதவியுடன் செங்கல் வீடுகள் கட்டும் முயற்சிகள்
ஆக.23,2011. இலங்கையில் மிகவும் ஏழ்மையில், பின்தங்கிய நிலையில் உள்ள சீமவேலியா எனும்
பங்குத் தளத்தில் காரித்தாஸ் உதவியுடன் செங்கல் வீடுகள் கட்டும் முயற்சிகள் முழு வீச்சில்
நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் காரித்தாஸ் மற்றும் ஏனைய பிறரன்பு பணி நிறுவனங்களின்
உதவியுடன் தற்போது 43 வீடுகள் உருவாகி வருகிறதென காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான
அருள்தந்தை Jude Nicholas Fernando கூறினார்.
இப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு காணப்படும்
சேற்று மண் கொண்டு வீடுகள் அமைத்து வந்தனர். வியாபார ரீதியில் பல நிறுவனங்கள் அப்பகுதியில்
இந்தச் சேற்று மண்ணை எடுத்து விற்று வந்ததை காரித்தாஸ் அமைப்பு இம்மக்களுக்குச் சுட்டிக்
காட்டி, அவர்களே தங்கள் நிலத்து மண் கொண்டு செங்கல் உருவாக்கும் வழிகளை கற்றுத் தந்தனர்
என்று UCAN செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதுவரை மழைக் காலத்தில் சேற்று மண்ணால்
அமைந்த வீடுகளில் குடியிருந்தோர், தற்போது இந்த உதவிகளால் நலமான நிரந்தரமான செங்கல் வீடுகளில்
இருப்பது எவ்வளவோ மேல் என்று அருள்தந்தை Fernando மேலும் கூறினார்.