2011-08-19 16:41:49

இராணுவத்தில் பணி புரிவோரும், காவல்துறையினரும் உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டும் - இந்தோனேசிய ஆயர்


ஆக.19,2011. இராணுவத்தில் பணி புரிபவர்களும், காவல்துறையினரும் கத்தோலிக்க விசுவாசக் கோட்பாடுகளின் அடிப்படையில் உண்மைக்கும் நீதிக்கும் போராட வேண்டும் என்று இந்தோனேசிய ஆயர் ஒருவர் கூறினார்.
மரியாவின் விண்ணேற்புத் திருநாளையொட்டி, இப்புதனன்று Jakartaவில் உள்ள விண்ணேற்பு மரியா பேராலயத்தில் 800க்கும் அதிகமான இராணுவ வீரர்கள், மற்றும் காவல்துறையினருக்கென பேராயர் Ignatius Suharyo சிறப்புத் திருப்பலியொன்றை நிகழ்த்தி, மறையரையாற்றுகையில் இவ்விதம் கூறினார்.
நாட்டில் நிலவும் ஊழல், அதன் விளைவாக உருவாகும் ஏழ்மை ஆகியவற்றை துடைக்க கத்தோலிக்க விசுவாசக் கண் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் வீரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
ஆகஸ்ட் 17 இப்புதனன்று இந்தோனேசியா விடுதலை பெற்று 66 ஆண்டுகள் நிறைவுறும் வேளையில், பேராயர் வெளியிட்ட ஒரு சுற்றுமடலில், நாடு அடைந்துள்ள முன்னேற்றங்கள் மகிழ்வைத் தந்தாலும், பல்வேறு சமுதாயப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.