2011-08-19 16:41:04

இரமதான் முடிவடைவதையொட்டி திருப்பீட பல்சமய உரையாடல் அவை இஸ்லாமியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி


ஆக.19,2011. சமயங்களை மறந்து, செல்வம் பொருள் இவைகளையே அதிகம் நாடி வரும் இவ்வுலகிற்கு ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வதில் கிறிஸ்தவமும், இஸ்லாமிய மதமும் உழைக்க முடியும் என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.
இஸ்லாமியர் மேற்கொண்டு வரும் இரமதான் மாத நோன்புகள் முடிவடையும் நிலையில், அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை இவ்வேள்ளியன்று அனுப்பியுள்ள திருப்பீட அவை இவ்வாறு கூறியுள்ளது.
இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தாலும், உரிமைகளும் கடமைகளும் கொண்ட தனிமனித மாண்பினை இவ்விரு சமயங்களும் வலியுறுத்துகின்றன என்பதை திருப்பீட அவையின் செய்தி கூறுகிறது.
அடுத்தத் தலைமுறையினர் நன்னெறி மதிப்பீடுகளை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு நல்ல வழிகளை உருவாக்கித் தருவது நமது கடமை என்பதை இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் உணர வேண்டும் என்றும் திருப்பீட அவையின் இச்செய்தி சுட்டிக் காட்டுகிறது







All the contents on this site are copyrighted ©.