Anna Hazareதலைமையில் நடைபெறும் போராட்டங்களுக்கு சில கிறிஸ்தவ அமைப்புக்கள்
கண்டனம்
ஆக.17,2011. ஊழலுக்கு எதிராக இந்தியாவில் Anna Hazare தலைமையில் நடைபெறும் போராட்டங்களை
இந்தியாவில் உள்ள சில கிறிஸ்தவ அமைப்புக்கள் கண்டனம் செய்துள்ளன. நாட்டில் நிலவும்
ஊழல் குறித்த சட்டங்கள் இயற்றும் முயற்சியாக தற்போதைய பாராளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதங்கள்
இடம்பெற்று வரும் இவ்வேளையில், Hazare தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தவறான
ஒரு போக்கு என்றும், சாலைகளிலும், தெருக்களிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் மூலம்
நாட்டை ஆள்வது இயலாத ஒன்று என்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சார்பில் பேசிய பாபு ஜோசப்
கூறினார். இந்தியாவின் மக்களாட்சி நியதிகளுக்கு Hazareன் போராட்டம் தகுந்த மதிப்பு
தருவதாகத் தெரியவில்லை என்று பொதுநிலையினரின் தலைவர்களில் ஒருவரான ஜான் தயாள் கூறினார். Anna
Hazareம் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலரும் இச்செவ்வாயன்று கைதுசெய்யப்பட்டதைக்
கண்டித்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில்
ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.