2011-08-13 14:02:45

போபால் விஷவாயு விபத்துக் கம்பனிக்கு எதிராக கையெழுத்து இயக்கம்


ஆக.13,2011. போபால் விஷ வாயு விபத்துடன் தொடர்புடைய அமெரிக்க டோவ் (Dow) வேதிய நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனுசரணையாளராக தேர்வாகியுள்ளதை எதிர்த்து கையெழுத்துக்களை சேகரிக்கும் இயக்கமொன்று இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்த விஷ வாயு விபத்துத் தொடர்பில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நட்ட ஈடு குறித்த வழக்குகள் இன்னமும் முடிவு பெறவில்லை என்பதாலும் இந்த நிறுவனம் ஒலிம்பிக் போட்டிகளோடு சம்மந்தப்பட்டிருக்கக் கூடாது என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.