நேபாளத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் சட்டப் பரிந்துரை குறித்து திருச்சபைத் தலைவர்கள்
கவலை
ஆக.13,2011. நேபாளத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யும் நோக்கத்தில் குற்றவியல் சட்டப் பிரிவில்
பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தலத்திருச்சபைத் தலைவர்கள் தங்கள் கவலையை
வெளியிட்டுள்ளனர். மதமாற்றம் குறித்த இப்பரிந்துரை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு
மூத்த அரசியல் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பக் கடிதம் அனுப்பியுள்ளனர்
நேபாளத் திருச்சபைத் தலைவர்கள். இந்தப் புதியச் சட்டப் பரிந்துரை கடந்த ஜூனில் மக்களவையில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இது உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நேபாள குருகுல
அதிபர் அருட்பணி பயஸ் பெருமானா கூறினார்.