2011-08-13 13:56:07

உலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் கம்போடிய இளையோர்


ஆக.13,2011. மத்ரித்தில் நடைபெறும் இவ்வுலக இளையோர் தின நிகழ்ச்சிகளில் 200 நாடுகளிலிருந்து இளையோர் பங்கு கொள்வது கத்தோலிக்கத்தின் “உலகளாவிய”த் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்று கம்போடியாவுக்கான அப்போஸ்தலிக்க அதிபர் ஆயர் Olivier Michel Marie Schmitthaeusler கூறினார்.
கம்போடியாவிலிருந்து 14 இளையோர் மத்ரித் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருப்பது குறித்துப் பேசிய ஆயர் Schmitthaeusler, இளம் கம்போடியர்களுக்கு இது விசுவாசம் மற்றும் திருச்சபையின் அனுபவமாக இருக்கும் என்றார்.
கம்போடியர்கள் இறைவார்த்தையை அறிவிப்பதற்கு விவிலிய மற்றும் இறையியல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றும் ஆயர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.