வட இந்தியாவில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு கத்தோலிக்கத் திருச்சபை முயற்சி
ஆக.12,2011. வட இந்தியாவில் இந்தி மற்றும்பிற உள்ளூர் மொழிகள் வழியாக பாரம்பரியங்களையும்
கலாச்சாரத்தையும் ஊக்குவிப்பதற்கு அப்பகுதி கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் உறுதி
எடுத்துள்ளனர். இந்தி மொழி பேசும் பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள் பேரவை, அலகாபாத்தில்
இவ்வாரத்தில் இரண்டு நாள் கூட்டத்தை நடத்திய போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தி
மொழி பேசும் பகுதிகளில் நிலவும் முக்கிய விவகாரங்களைக் களைவதற்கு இந்தி மொழியை ஊக்குவிக்க
வேண்டியது இன்றியமையாதது என்று அலகாபாத் ஆயர் Isidor Fernandez கூறினார்.