2011-08-11 15:23:13

இலங்கையில் போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்


ஆக 11, 2011. இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
போரின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்குத் தேவையான பணிகளில் ஈடுபடுவதுமே சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணி.
இச்சங்கம் ஜெனீவாவில் இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் மருத்துவமனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது, கொலம்பியாவில் காயமடைந்த மக்கள் கொல்லப்பட்டது, லிபியாவில் அம்புயூலன்ஸ் வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது போன்றவை குறித்த கவலையை வெளியிட்டுள்ளார் செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் Yves Daccord.
இலங்கை, சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் மருத்துவப்பிரிவினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.