ஆந்திராவில் பொய்க் குற்றச்சாட்டின்பேரில் ஐந்து கிறிஸ்தவர்கள் கைது
ஆக.09,2011. மதமாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் ஆந்திராவில் ஐந்து
கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும், அக்கிறிஸ்தவர்களைத் தாக்கியவர்கள் எவ்விதத்
தண்டனையுமின்றி தப்பியுள்ளதும் கவலை தருவதாக உள்ளதாகத் தெரிவித்தார் இந்தியக் கிறிஸ்தவர்களின்
உலக அவையின் தலைவர் சாஜன் ஜார்ஜ். இந்துக் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு மலையில் 'இயேசு
மீட்கிறார்' என்ற வார்த்தையை எழுதியதற்காக ஐந்து கிறிஸ்தவர்களைத் தாக்கிய ஆர்.எஸ்.எஸ்.
இயக்க அங்கத்தினர்கள், பின்னர் அவர்களைக் காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளனர். அவர்களை
மதமாற்ற முயற்சியின் கீழ் கைதுச்செய்த காவல்துறை, பின்னர் பிணையத்தின்பேரில் விடுதலை
செய்துள்ளது. காவல்துறை இத்தகைய சார்பு எண்ணத்துடன் செயல்படுவதால், கிறிஸ்தவர்கள்
மீதான தாக்குதல்கள் தொடரும் ஆபத்து இருப்பதாக கவலையை வெளியிட்டுள்ளார் சாஜன் ஜார்ஜ்.