150 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இம்மாதம் 12ம் தேதி விடுவிக்கப்படுவர்
ஆக.09,2011. புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 150
பேர், வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு
ஆணையாளர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக
முன்னர் 24 புனர்வாழ்வு நிலையங்கள் இருந்தபோதிலும் பலர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட
நிலையில் தற்போது 9 நிலையங்கள் மட்டுமே இயங்குவதாகவும் அவர் கூறினார். வன்னிப்போரில்
சரணடைந்த 11,700 முன்னாள் போராளிகளில் 7,969 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2,879
பேர் இன்னும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.