ஆக 08, 2011. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களிடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கும்
நோக்குடன் இந்தோனேசியாவில் இம்மாதம் ஏழாம் தேதி முதல் 17ம் தேதி வரை கருத்தரங்கு ஒன்றை
நடத்திவருகின்றது வின்சென்ட் தெ பால் கத்தோலிக்கத் துறவு சபை. இவ்விரு மதங்களின் பாரம்பரியங்கள்
குறித்து ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும், மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும்
என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் 32 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள்
கலந்துகொள்கின்றனர்