2011-08-06 14:54:50

வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் மீது மதிப்பும் தோழமையும் காட்டப்பட ஆசிய ஆயர்கள் வேண்டுகோள்


மதிப்பும் தோழமையும் காட்டப்படுமாறு ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.
"Caritas In Veritate" அதாவது உண்மையில் பிறரன்பு என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் திருமடல் ஆசியச் சூழலில் அறிவுறுத்தும் கருத்துக்கள் குறித்து தாய்லாந்து நாட்டு பட்டாயாவில் அண்மையில் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
ஆசியாவில் 5 கோடியே 30 இலட்சம் வீட்டுவேலைசெய்யும் குடியேற்றதாரர் உள்ளனர் என்றும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் 12 ஆசிய நாடுகளிலிருந்து 35 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.