மத்திய பிரதேச அரசு, உண்மையான விவகாரங்களைத் தவிர்ப்பதற்கு முயற்சித்து வருகின்றது –
போபால் பேராயர்
ஆக.05,2011. பள்ளிச் சீறுடைகளின் ஒரு பகுதியான “டை” கட்டுவதைத் தடை செய்தல் போன்ற சாரமற்ற
விவகாரங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கல்வியின் தரத்தை முன்னேற்றுவதில் மத்திய
பிரதேச அரசு கவனம் செலுத்துமாறு போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கேட்டுக் கொண்டார். மாணவியர்
டைகள் அணியும் பழக்கம், மேற்கத்திய கலாச்சாரத் தாக்கத்தால் வந்தது என்று சொல்லி அவை பள்ளிச்
சீறுடைகளில் இனிமேல் இடம்பெறாது என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்திருப்பதையடுத்து
பேராயர் கொர்னேலியோ இவ்வாறு கூறினார். மத்திய பிரதேச அரசு, உண்மையான விவகாரங்களைத்
தவிர்ப்பதற்கு முயற்சித்து வருகின்றது என்று பேராயர் லியோ கொர்னேலியோ மேலும் கூறினார்.