மதம் அரசியலைச் சுத்தப்படுத்துகின்றது - கர்தினால் புர்க்கே
ஆக.05,2011. இவ்வியாழனன்று நிறைவடைந்த Knight of Columbus நிறுவனத்தின் மாநாட்டில் உரையாற்றிய
வத்திக்கான் உச்சநீதிமன்றத் தலைவர் கர்தினால் ரெய்மண்ட் புர்க்கே, மதம் அரசியலைச் சுத்தப்படுத்துகின்றது
என்றார். சமுதாயத்தில் சமய உணர்வு அற்றுப்போகும் போது அரசியல்வாதிகள், குடிமக்களின்
அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள் என்றார் கர்தினால் புர்க்கே. இரண்டாயிரத்துக்கு
அதிகமான பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய கர்தினால் புர்க்கே, மதத்தைச் சுதந்திரமாய்க் கடைபிடிப்பதற்கு
அனைத்து நாடுகளும் உறுதி வழங்குமாறு வலியுறுத்தினார்.