2011-08-05 15:25:09

துன்பங்களின் மத்தியிலும் விசுவாசத்தை இழக்க மாட்டோம்- ஃபுக்குஷிமா சிறார் திருத்தந்தையிடம் உறுதி


ஆக.05,2011. துன்பங்களின் மத்தியிலும் தாங்கள் ஒருபோதும் விசுவாசத்தை இழக்க மாட்டோம் என்று வடகிழக்கு ஜப்பானைச் சேர்ந்த இருபது ஆரம்பப்பள்ளி சிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் தெரிவித்தனர்.
ஜப்பானின் Ofunato நகரைச் சேர்ந்த பள்ளிச்சிறார் இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்த போது இவ்வாறு கூறியதோடு, தாங்கள் துடிப்புடன் வாழ்ந்து தங்களது நகரை இன்னும் அழகானதாக அமைப்பதற்கு உறுதி கொண்டுள்ளதாகக் கூறினர்.
Ofunato கடற்கரை நகரத்தைச் சேர்ந்த இந்தச் சிறார், கடந்த மார்ச் 11ம் தேதி நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சேதமடைந்த ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து வெளியான கதிர்வீச்சுக்களின் தாக்கத்தை அனுபவித்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.