2011-08-03 16:32:03

தொமினிக்கன் குடியரசின் சிறைகளில் காலரா அச்சுறுத்தல், திருச்சபை கண்டனம்


ஆக.03,2011. தொமினிக்கன் குடியரசின் சிறைகளில் காலரா நோய்ப் பரவிய தகவல்களை அதிகாரிகள் மறைத்துள்ளது குறித்து அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை அரசைக் குறை கூறியுள்ளது.
அந்நாட்டுச் சிறைகளின் சுகாதாரமற்ற நிலைகள், கைதிகளுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கின்றன என்றும் காலரா நோய்ப் பரவுவதற்கு இதுவே காரணம் என்றும் அந்நாட்டு ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணிக் குழு அரசைக் குறை கூறியது.
இதற்கிடையே, சிறைகளில் காலராப் பரவியது என்ற குற்றச்சாட்டை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஹெய்ட்டியில் 2010ம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் அந்நாட்டில் காலராப் பரவியதையடுத்து அதன் அண்டை நாடான தொமினிக்கன் குடியரசிலும் அந்நோய்ப் பரவியது. இதனால் ஹெய்ட்டியில் ஆறாயிரத்துக்கு அதிகமானோரும் தொமினிக்கன் குடியரசில் 92 பேரும் இறந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.