அம்ராவதி மறைமாவட்ட முதல் ஆயர் ரொசாரியோ இறைபதம் சேர்ந்தார்
ஆக.01, 2011. இந்தியாவின் அம்ராவதி மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஜோசப் ஆல்பர்ட் ரொசாரியோ
இஞ்ஞாயிறன்று காலை இறைபதம் சேர்ந்தார். 1915ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி பிறந்த ஆயர்
ரொசாரியோ, 1944ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1955ம் ஆண்டு அம்ராவதி மறைமாவட்டம்
உருவாக்கப்பட்டபோது அதன் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். தன் 80 வயது வரை அம்மறைமாவட்ட
ஆயர் நிர்வாகப் பணிகளைக் கவனித்து வந்த ஆயர் ரொசாரியோ, 1995ம் ஆண்டு ஏப்ரல் முதல்தேதி
அப்பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இஞ்ஞாயிறன்று காலமான 96 வயதான ஆயரின் அடக்கச்சடங்கு
இச்செவ்வாய் காலை அம்ராவதி பேராலயத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.