ஆக.01, 2011.மெகாலயாவின் Jowai மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் கிம்பாட் இச்சனிக்கிழமை நண்பகல்
மாரடைப்பால் காலமானார். காலை 11.30 வரை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்த 64 வயதான
ஆயர் கிம்பாட் நண்பகல் 12 மணிக்கு குழியலறையில் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். 1946ம்
ஆண்டு மௌசுரோங்கில் பிறந்த இவர், 1977ல் ஷில்லாங் மறைமாவட்டக் குருவாகவும் 2006ல் Jowai
ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்