பாகிஸ்தானில் சிறுபான்மை அமைச்சகம் மீண்டும் பிறப்பு
ஜூலை 30,2011. பாகிஸ்தானில் அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் என்ற பெயரில் அண்மையில்
இரத்து செய்யப்பட்ட அந்நாட்டுச் சிறுபான்மை அமைச்சகத்தைப் புதிய பெயரில் மீண்டும் அமைப்பதற்கு
அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்தது. கடந்த மார்ச்சில் தீவிரவாதக்
குழுவால் கொல்லப்பட்ட Shahbaz Bhatti தலைமை வகித்து வந்த சிறுபான்மை அமைச்சகம், தேசிய
நல்லிணக்க அமைச்சகம் என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் இதை வழிநடத்தும் பொறுப்பு கத்தோலிக்க
அரசியல்வாதி Akram Gill டம் ஒப்படைக்கப்படும் எனவும் அச்செய்தி நிறுவனம் கூறியது. சிறுபான்மை
மதத்தவரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இப்புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.