நாடுகளில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுவது தொடர்கின்றது – ஐ.நா.
ஜூலை 30,2011. பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவதில் சில நாடுகளில் முன்னேற்றம் தெரிந்தாலும்
அவர்களின் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம் பெறுவதாக
ஐ.நா. அறிவித்தது. பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் ஒழிப்பு ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற
ஐ.நா.கூட்டம் பற்றி நிருபர்களிடம் தெரிவித்த இந்த ஒப்பந்தக் கமிட்டித் தலைவர் சில்வியா
பிமெண்ட்டல், இத்தாலி, எத்தியோப்பியா, நேபாளம், சிங்கப்பூர், ஜாம்பியா, கோஸ்ட்டா ரிக்கா,
கொரியக் குடியரசு ஆகிய நாடுகளில் சேகரித்த விபரங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டது
என்றார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயலைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இல்லையென்ற
அவர், சில நாடுகளில் குழந்தை பிறப்பின் போது தாய்மார் இறப்புகள் அதிகம் இடம் பெறுவது
குறித்தக் கவலையையும் தெரிவித்தார்.