மலாவி நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க அரசுக்கு ஆயர் விண்ணப்பம்
ஜூலை 26, 2011. மலாவி நாட்டில் செவிமடுப்பதற்கும் பேச்சுவார்த்தைக்குமான தேவை இருப்பதாகவும்,
அதனை முயற்சி எடுத்துத் துவக்க வேண்டியது அரசின் கடமையாகிறது எனவும் வலியுறுத்தினார்
அந்நாட்டு பேராயர் Gervazio Tarcisius Ziyaye. அனைத்து விதமான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு,
மக்களின் தேவைகளுக்கு செவிமடுக்கப்படவேண்டும் என்ற பேராயர், கடைகளும் வீடுகளும் வன்முறையாளர்களால்
சூறையாடப்பட்டதை தான் நேரில் காண நேர்ந்ததாகவும் கூறினார். பொருளாதார நெருக்கடிகளால்
எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழி 'பேச்சுவார்த்தைகளை' கைக்கொள்வதே
என்ற பேராயர், மக்களின் குரலுக்குச் செமடுக்க அரசு முன்வரவேண்டும் என்றார். அரசுக்கும்
தலத்திருச்சபைக்கும் இடையே எவ்விதப் பதட்ட நிலைகளும் இல்லை என்ற பேராயர் Ziyaye, அரசுத்தலைவரைச்
சந்திக்க மலாவி ஆயர் பேரவை முன்வைத்துள்ள விண்ணப்பம் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றது
என மேலும் கூறினார்.