2011-07-26 16:34:43

தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம், நீதி கிட்டும் வரை ஓயாது


ஜூலை 26, 2011. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம் வன்முறையற்றது மட்டுமல்ல, நீதி கிட்டும் வரை ஓயாதது என்றார் டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ.
தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்காக டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மக்களுக்கு உரை நிகழ்த்திய பேராயர், தலித் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு தற்போதைய மத்திய அரசு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என்றார்.
புத்தம், சீக்கியம் மற்றும் இந்து மதங்களைச் சார்ந்த தலித் இன மக்களுக்கு வழங்கப்படும் அரசுச் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த அதே இன மக்களுக்கு மறுக்கப்படுவதை கண்டித்தும், உரிமைகளை வேண்டியும் இத்திங்களன்று டெல்லியில் துவக்கப்பட்ட உண்ணாநோன்பு போராட்டம், இவ்வியாழன் பாராளுமன்றம் நோக்கிய பெரும் ஊர்வலத்துடன் நிறைவுக்கு வரும்.








All the contents on this site are copyrighted ©.