நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுதாபச் செய்தி
ஜூலை 25, 2011. நார்வேயின் ஓஸ்லோ நகரின் குண்டு வெடிப்பு மற்றும் அண்மைத் தீவின் இளைஞர்
முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும்
வெளியிட்டு அந்நாட்டிற்கு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த வன்முறைகளால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக
நார்வே மன்னர் 5ம் ஹெர்ரால்டுக்கு அனுப்பியுள்ள அத்தந்திச்செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை,
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கானத் தன் செபத்திற்கும் உறுதி
கூறியுள்ளார். இந்தத் துன்பகரமான நேரத்தில் ஒரே குடும்பமாய் ஆன்மீக ஒன்றிப்பைக் காணும்
நார்வே நாடு, பகைமை மற்றும் மோதல்களின் வழியை ஒதுக்கித்தள்ளும் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும்
அதில் கூறியுள்ளார் பாப்பிறை.