ஞாயிறு வாசகங்கள் I அரசர்கள் முதல் நூல் 3: 5,7-12 II உரோமையருக்கு எழுதிய திருமுகம்
8: 28-30
மத்தேயு நற்செய்தி 13: 44-52
மத்தேயு நற்செய்தி 13: 44-52 இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர்
நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு
மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்.
விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். “வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.
விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார்.
விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும்
வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில்
உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே
உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;
பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.” “இவற்றையெல்லாம்
புரிந்து கொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர்,
“ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து
புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்”
என்று அவர்களிடம் கூறினார்.