கர்நாடக அரசுப் பள்ளிகளில் இந்துமத மறைநூல் கற்பிப்பது வருவது குறித்துத் தலத்திருச்சபைத்
தலைவர்கள் கவலை
ஜூலை 22,2011. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் இந்துமத மறைநூல் கட்டாயமாகக்
கற்பிக்க அனுமதியளிப்பது குறித்துத் தலத்திருச்சபைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். கர்நாடக
அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை பற்றிய வகுப்புகள் நடத்துவதற்கு இந்துமதக் குழுக்கள் அனுமதிக்கப்படுவார்கள்
என்று அம்மாநிலக் கல்வித்துறை கடந்த ஜூன் 9ம் தேதி அறிவித்ததிலிருந்து பரவலான எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் குறித்து தற்போது எதிர்ப்புகள் அதிகரித்து வரும்வேளை
தலத்திருச்சபையும் இந்த எதிர்ப்புக்களுடன் இணைந்துள்ளது. இது குறித்துக் கருத்துத்
தெரிவித்த பெங்களூர் பேராயர் பெர்னார்டு மொராஸ், சமயசார்பற்ற ஓர் அரசு, ஒரு மதத்தை மட்டும்
திணிக்கவோ அல்லது வளர்க்கவோ ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது என்றார். “கிறிஸ்தவமும்
இசுலாமும் வெளிநாட்டு மதங்கள், அவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் இந்தியர்கள் அல்ல” என்று
புதுடெல்லியிலுள்ள கர்நாடக அரசின் பிரதிநிதி Dhananjay Kumar இவ்வாரத்தில் கூறியதையடுத்து
எதிர்ப்புக்கள் வலுவடைந்து வருகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.