2011-07-21 16:20:13

தலித் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு விஜயவாடா ஆயர் அழைப்பு


ஜூலை 21, 2011. நற்செய்தி அறிவிப்பின்போதே அமைதி, ஒப்புரவு, மற்றும் நீதிக்கென உழைப்பதற்கான அர்ப்பணத்தைத் தூண்டுவதாக துறவறத்தாரின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஆந்திராவின் விஜயவாடா ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு.
விஜயவாடாவின் இலயோலா கல்லூரி அரங்கில் இடம்பெற்ற இந்திய துறவத்தார் அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் மல்லவரப்பு, இம்மாதம் 25 முதல் 27 வரை இடம்பெறும் தலித் மக்களுக்கான உண்ணா நோன்புப் போராட்டத்தில் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டிய துறவறத்தாரின் கடமைகளையும் வலியுறுத்தினார்.
தலித் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக ஒரு நாளை, செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ஆயர்.








All the contents on this site are copyrighted ©.