ஞாயிற்றுக்கிழமை, வழிபாட்டிற்கும் ஓய்வுக்குமென ஒதுக்கப்பட வேண்டும் - பேரருட்திரு கலின்டோ
ஜூலை20,2011. ஞாயிற்றுக்கிழமை, வழிபாட்டின் நாள் மற்றும் குடும்பத்தோடும் நண்பர்களோடும்
ஓய்வெடுத்து நேரத்தைச் செலவழிக்க வேண்டிய நாளாகக் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று திருப்பீட
பொதுநிலையினர் அவையின் நேரடிச் செயலர் பேரருட்திரு Miquel Delgado Galindo வலியுறுத்தினார். வாரத்தின்
முதல் நாளாகிய இந்த நாளில் நாம், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூருகிறோம் என்றுரைத்த
அவர், இந்நாளை இறை வழிபாட்டிற்கும் மனித ஓய்வுக்குமென ஒதுக்க வேண்டுமெனத் திருச்சபை போதிக்கின்றது
என்றார். ஞாயிற்றுக்கிழமைகளில் கத்தோலிக்கர் திருப்பலிகளில் பங்கெடுக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்ட பேரருட்திரு Galindo, வில்லை, எப்படி தொடர்ந்து வளைத்துக் கொண்டே இருக்க
முடியாதோ அதேபோல், மனிதனும் எப்பொழுதும் வேலை செய்து கொண்டு இருக்க முடியாது என்றார்.