2011-07-20 16:48:36

அழிந்து கொண்டிருக்கும் இலங்கையின் சனநாயக விழுமியங்களைக் கத்தோலிக்கர் தாங்கிப் பிடிக்க வேண்டும் – பத்திரிக்கையாளர் கோரிக்கை


ஜூலை20,2011. இலங்கையின் சனநாயக விழுமியங்கள், அழிவின் இறுதி எல்லைக்கே வந்துவிட்ட நிலையில் அவற்றைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது கத்தோலிக்க அருட்பணியாளரும் துறவியரும் பொதுநிலையினருமே என்று அந்நாட்டு முக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
இலங்கையின் தற்போதைய உண்மை நிலையும் கத்தோலிக்கரின் பணியும் என்ற தலைப்பில் சிலாவ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய Ravaya செய்தித்தாளின் ஆசிரியர் Majuwana Kankanamage Victor Ivan, நாட்டில் சனநாயக விழுமியங்களை ஊக்குவிக்க நாம் தவறி விட்டோம் என்று கூறினார்.
நாட்டில் பரவலாக ஊழலும் பொது நிதி பெருமளவில் வீணாக்கப்படுவதையும் காண முடிகின்றது என்றுரைத்த Victor Ivan, பணம்படைத்தவர் எதையும் பெறலாம் என்று நமது அனுபவம் சொல்கிறது, அத்தகைய சமுதாயத்தில் உரிமைகள், பொறுப்புகள் இவை பற்றிய உணர்வே இருக்காது என்றார்.
இந்தக் கருத்தரங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.