2011-07-16 15:27:01

துனிசியாவில் சனநாயக அரசுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முழு ஆதரவு


ஜூலை 16,2011. வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் இடம் பெறும் சனநாயகத்தை நோக்கிய மாற்றங்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை தனது முழு ஆதரவையும் வழங்குகின்றது என்று துனிஸ் பேராயர் Maroun Lahham கூறினார்.
கடந்த ஜனவரியில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்று தற்சமயம் புதிய சனநாயக அரசியல் அமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் துனிசியாவில் முழு சமய சுதந்திரம் வழங்கப்படும் என்ற தனது நம்பிக்கையையும் பேராயர் தெரிவித்துள்ளார்.
துனிசியாவில் இடம் பெற்று வரும் சனநாயக மாற்றங்கள் குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட பேராயர் Lahham, இசுலாம் மதமும் நாடும் தனித்தனியாகச் செயல்படும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார்.
துனிசியாவிலுள்ள சுமார் 22 ஆயிரம் கத்தோலிக்கரில் ஏறத்தாழ அனைவருமே வெளிநாட்டவர்







All the contents on this site are copyrighted ©.