2011-07-16 15:24:40

திருப்பீடம் : நியுயார்க்கில் இளையோர் குறித்த நிகழ்வு


ஜூலை 16,2011. இளையோரைப் பாதுகாத்து மனித மாண்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்மாதத்தில் நியுயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது திருப்பீடம்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர்மட்ட அவை இம்மாதத்தில் இளையோர் குறித்து கூட்டம் நடத்தவிருக்கும் அதேநேரத்தில் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்ப் பணிக்குழுவானது “இளையோர் பாதுகாப்பு மற்றும் மனித மாண்பை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்ப் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், இம்மாதம் 24ம் தேதி மாலை திருக்குடும்ப ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார். 25ம் தேதி திருப்பீடத்தின் இளையோர்க்கான நிகழ்வு நடைபெறும்.







All the contents on this site are copyrighted ©.