ஜூலை14,2011. அன்பர்களே, இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பாக சேனல்
4ல் ஒளிப்படக்காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதையொட்டி இலங்கை அரசு விசாரணைக்கு உட்படுத்தப்பட
வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் சென்ற வண்ணம் இருக்கின்றன. இது குறித்தத்
திருச்சபையின் நிலைப்பாடு பற்றி அறிவதற்கு மன்னார் மறைமாவட்ட குருகுல அதிபர் அருட்பணி
விக்டர் சூசை அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம்