மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியின் ஏழாவது உலக மாநாடு
ஜூலை13,2011. 2012ம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் 27 வரை மெக்சிகோவில் திருப்பீடம் நடத்தும்
சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியின் ஏழாவது உலக மாநாட்டிற்கு அந்நாட்டு அரசு தனது
முழு ஆதரவை வழங்க உறுதியளித்திருப்பதாகத் திருப்பீடத்துக்கான மெக்சிகோ தூதுவர் Hector
Frederick Ling Altamirano அறிவித்தார். தென் மெக்சிகோவின் Cancun நகரில் இம்மாநாடு
நடைபெறவுள்ளது. கத்தோலிக்க உலகில் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள
துறவிகள், பொதுநிலையினர் இதில் கலந்து கொள்வார்கள். மெக்சிகோ நகரிலுள்ள குவாதாலூப்பே
அன்னைமரி திருத்தலம் உலகில் கத்தோலிக்கர் அதிகமாகச் செல்லும் திருத்தலமாகும். WTO
என்ற உலக சுற்றுலா நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்லும்
நாடுகளில் பத்தாவது இடத்தையும் இலத்தீன் அமெரிக்காவில் முதல் இடத்தையும் வகிக்கின்றது
மெக்சிகோ. 2010ல் மட்டும் 2 கோடியே 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் மெக்சிகோவைப்
பார்வையிட்டனர். இவ்வெண்ணிக்கை 2009ம் ஆண்டைவிட 45 இலட்சம் அதிகம்.