மியான்மார் அரசு கைதிகளை மோதல்களுக்குப் பயன்படுத்துகிறது – மனித உரிமைகள் குழு குறை
ஜூலை13,2011. மியான்மாரில் அதிக சுதந்திரம் கேட்டு பல ஆண்டுகளாகப் போரில் ஈடுபட்டுள்ள
இனங்களின் புரட்சியாளர்களுடன் இராணுவம் நடத்தும் போரில் கைதிகள் முதல் வரிசையில் நின்று
போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஒரு முக்கிய அனைத்துலக மனித உரிமைகள் குழு
குறை கூறியது. கைதிகள் இவ்வாறு கட்டாயமாகப் பயன்படுத்தப்படுவது போர்க் குற்றங்களாகும்,
இது குறித்து ஐ.நா. நிறுவனம் புலன் விசாரணை நடத்துமாறு ஹூயுமன் ரைட்ஸ் வாச் மனித உரிமைகள்
குழு கேட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரின் இராணுவம், சுமார் இருபது
ஆண்டுகளாக, கைதிகள் உட்பட அப்பாவி குடிமக்களை, சுமைதூக்கிகளாகப் பயன்படுத்துகிறது என்று
ஊடகங்கள் கூறுகின்றன. மியான்மாரில் ஏறக்குறைய இரண்டாயிரம் அரசியல் கைதிகள் சிறையில்
உள்ளனர். மேலும், இந்நாட்டின் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புலம் பெயர்ந்தோர் அண்டை நாடான
தாய்லாந்தில் வாழ்கின்றனர்.