2011-07-13 16:03:16

புனித பூமியில் கிறிஸ்தவ சமூகங்களைப் பேணிக் காப்பதற்கு பிரிட்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


ஜூலை13,2011. புனித பூமியில் கிறிஸ்தவ சமூகங்களைப் பேணிக் காப்பதற்கென நிதியுதவிக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளனர் பிரிட்டன் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் கத்தோலிக்கப் பேராயர் வின்சென்ட் நிக்கோல்சும் ஆங்லிக்கன் பேராயர் வில்லியம்சும் இணைந்து இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் லாம்பத் மாளிகையில் கூட்டம் நடத்தி புனிதபூமிக் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்காக அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பொது அவையின் 2011ம் ஆண்டு அவைக் குழுக்களுக்கு விண்ணப்பித்த கான்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ், புனித பூமிக் கிறிஸ்தவச் சமூகங்களைப் பேணிக் காப்பதற்கென நிதியுதவிக்கு அழைப்பு விடுத்தார்.
புனித பூமிக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களைத் தான் நேரிடையாகக் காண முடிந்ததாகவும் அவர்களின் அண்மை எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நிதியுதவிகள் தேவை எனவும் பேராயர் வில்லியம்ஸ் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.