அயர்லாந்து கிறிஸ்தவர்கள் வன்முறையைக் கைவிட ஆயர் அழைப்பு
ஜூலை13,2011. வட அயர்லாந்தில் மீண்டும் வகுப்புவாத வன்முறைகள் தலைதூக்கியுள்ள வேளை, அப்பகுதியின்
கத்தோலிக்கரும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரும் ஒன்றிணைந்து அமைதியில் வாழ முடியும் என்பதை
அவர்கள் உலகினருக்கு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பெல்பாஸ்ட் ஆயர் Noel
Treanor. இத்திங்களன்று நடைபெற்ற பேரணியின் போது 22 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதையொட்டி
இவ்விண்ணப்பத்தை முன்வைத்த ஆயர், ஊர்வலங்களில் கலந்து கொள்வோர் வன்முறையைத் தூண்டாத வண்ணம்
நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 1690ம் ஆண்டு ஜூலை 12ம் நாள், பிரிந்த கிறிஸ்தவ
சபை இளவரசர் ஆரஞ்சின் வில்லியம், கத்தோலிக்க அரசர் 2ம் ஜேம்சைத் தோற்கடித்ததைக் கொண்டாடும்
விதமாக, பிரிந்த கிறிஸ்தவ சபையினர் ஆண்டுதோறும் ஜூலை 12ம் நாளை "Orangeman தினம்" என்று
கடைப்பிடிக்கின்றனர்.