நல்ல உயரியச் சிகிச்சைகளைக் குறைந்த செலவில் வழங்குவதே கத்தோலிக்கரின் நோக்கம் - பேராயர்
சூசை பாக்கியம்
ஜூலை12,2011. நல்ல உயரியச் சிகிச்சைகளை குறைந்த செலவில் வழங்குவதே கத்தோலிக்கர்களின்
நோக்கமாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம். ஊழல்
மற்றும் சுரண்டல் பக்கம் செல்லாமல் நன்மைகளை ஆற்றுவதன் மூலமே உண்மையான மகிழ்வையும் மனநிறைவையும்
பெறமுடியும் என்று இத்தகைய சமூகப் பணிகள் காட்டி நிற்கின்றன என்ற பேராயர், இன்றையக் காலக்கட்டத்தில்
சமூகப்பணிகளில் கத்தோலிக்க இளையோர் காட்டி வரும் ஆர்வத்தையும் பாராட்டினார். மருத்துவக்கல்லூரி
மருத்துமனையின் நோயாளிகளுக்கு கடந்த 14 வருடங்களாக குமாரபுரம் கத்தோலிக்கப் பங்குத்தளம்
இலவச உணவு வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் சூசை பாக்கியம்.