கடவுளை அறிவதற்கானப் பற்றாக்குறை ஏழை நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது – கர்தினால்
சாரா
ஜூலை12,2011. உணவு, உடைகள் ஆகியவைகளின் பற்றாக்குறையைவிட கடவுளை அறிவதற்கானப் பற்றாக்குறை
ஏழை நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதாக எடுத்துரைத்தார் திருச்சபையின் பிறரன்புப் பணிகளுக்கான
'கோர் ஊனும்' அவையின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா. ஏழை நாடுகளில் அதிகம் அதிகமாகத்
தேவைப்படுவது தொழில்நுட்பக் கலைஞர்கள் அல்ல, மாறாக, மறைப்பணித் தளங்களில் பணிபுரிவோரின்
கிறிஸ்தவச் சாட்சியங்களே, ஏனெனில் பிறரன்பு என்பது கடவுளிடமிருந்தே வருகிறது என்றார்
அவர். உணவு மற்றும் உடைகளின் பற்றாக்குறையல்ல, மாறாக, கடவுளுக்கான இடத்தை சமூகத்தில்
வழங்காமல் இருப்பதே துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டிய
கர்தினால், ஆப்ரிக்காவில் உள்நாட்டு மோதல்கள் என்பவை, சட்டமற்ற ஒரு சுரண்டலுக்கு இட்டுச்
செல்வது குறித்த கவலையையும் வெளியிட்டார்.