"பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' : மகாராஷ்டிராவில் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜூலை11,2011. "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற பெயரில், மகாராஷ்டிரா மாநிலத்தில்
விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றைத் துவக்கி வைத்துள்ளார் மாநில முதல்வர் பிரிதிவிராஜ்
சவான். மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆண், பெண்களுக்கிடையேயான பாலின விகிதம் வெகுவாக
குறைந்து வருவதாகவும், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில அளவில்,
ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 883 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளதாகவும் தெரிய
வந்துள்ள நிலையில், இத்திஙகளன்று கடைபிடிக்கப்பட்ட அனைத்துலக மக்கள் தொகை தினத்தையொட்டி,
மகாராஷ்டிர மாநிலத்தில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற பிரச்சார விழிப்புணர்வு
நிகழ்ச்சிகளை முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தொடங்கி வைத்தார்.