2011-07-09 15:54:43

கிராமப்புற இளையோரின் திறமைகளை வளர்ப்பது இந்தியாவை வளப்படுத்துவதாகும் - பெல்லாரி ஆயர்


ஜூலை09,2011. கிராமப்புற இளையோரின் திறமைகளை வளர்ப்பது இந்தியாவை வளப்படுத்துவதாகும் என்று பெல்லாரி ஆயர் ஹென்ரி டி சூசா கூறினார்.
பெல்லாரி மறைமாவட்டத்தின் ரெய்ச்சூரில் வேலையின்றி இருக்கும் கிராமப்புற இளையோருக்கு அவர்களின் திறமைகளை வளர்க்கும் பயிற்சி வகுப்புக்களை இவ்வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசிய ஆயர் டி சூசா இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் இளையோர், இவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இவர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் முக்கியம், தங்களுக்காகப் புதிய எதிர்காலத்தை அமைக்கும் இவர்கள் புதியதோர் இந்தியாவுக்கும் வழி அமைப்பார்கள் என்றார் பெல்லாரி ஆயர் டி சூசா.
பெல்லாரி மறைமாவட்டம் மற்றும் சலேசிய சபையினரால் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.







All the contents on this site are copyrighted ©.