2011-07-08 16:27:25

மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் கல்விப் பணிக்குப் பாராட்டு


ஜூலை08,2011. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் வழங்கி வரும் தரமான கல்விக்குப் பாராட்டுத் தெரிவித்த அதேவேளை முஸ்லீம் சமூகமும் அதேபோல் தரமான கல்வி வழங்குமாறு வலியுறுத்தினார் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 95 விழுக்காட்டுக்கு அதிகமானவர்கள் கல்வி கற்றவர்கள், இவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம்களும் கிறிஸ்தவர்கள் போல் தரமான கல்வி வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரான திக்விஜய் சிங் கூறினார்.
சிறுபான்மை மதத்தவர் தங்களது உரிமைகளின் பாதுகாப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் தான் ஆதரவு அளிப்பதாகவும் சிங் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.